என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » லோக்ஆயுக்தா சட்டம்
நீங்கள் தேடியது "லோக்ஆயுக்தா சட்டம்"
புதுவையிலும் லோக்ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதிபட கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் பேசியதாவது:-
லோக்பால் சட்டத்தை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு 2013-ல் கொண்டு வந்தது.
இதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் லோக் பால் சட்டத்தை இயற்றி முதல்-அமைச்சர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் தொடர்பான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வழி உள்ளது.
நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் லோக்ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழகத்தில் லோக்ஆயுக்தா சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் மூலம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல், முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க வழி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று தமிழகத்தில் இந்த சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் புதுவை அரசு இந்த தீர்ப்பை ஏற்காதது வியப்பளிக்கிறது.
நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் என கூறும் புதுவை காங்கிரஸ் அரசு புதுவையிலும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவர அறிவிப்பு வெளியிட வேண்டும்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை புதுவை காங்கிரஸ் அரசு கொண்டுவராதது துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு அவர் பேசினார்.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறினாலும் மக்களவையில் நிறைவேறவில்லை. இதனால் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு இந்த சட்டம் அனுப்பப்பட்டு உள்ளது.
சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி பல்வேறு மாநிலங்களில் லோக்ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுவையிலும் லோக்ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் என்பதால் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
ஏற்கனவே டெல்லியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் விளக்கம் பெற்ற பிறகு லோக்ஆயுக்தா சட்டம் புதுவையிலும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Lokayukta
புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் பேசியதாவது:-
லோக்பால் சட்டத்தை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு 2013-ல் கொண்டு வந்தது.
இதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் லோக் பால் சட்டத்தை இயற்றி முதல்-அமைச்சர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் தொடர்பான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வழி உள்ளது.
நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் லோக்ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழகத்தில் லோக்ஆயுக்தா சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் மூலம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல், முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க வழி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று தமிழகத்தில் இந்த சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் புதுவை அரசு இந்த தீர்ப்பை ஏற்காதது வியப்பளிக்கிறது.
நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் என கூறும் புதுவை காங்கிரஸ் அரசு புதுவையிலும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவர அறிவிப்பு வெளியிட வேண்டும்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை புதுவை காங்கிரஸ் அரசு கொண்டுவராதது துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி பல்வேறு மாநிலங்களில் லோக்ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுவையிலும் லோக்ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் என்பதால் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
ஏற்கனவே டெல்லியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் விளக்கம் பெற்ற பிறகு லோக்ஆயுக்தா சட்டம் புதுவையிலும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Lokayukta
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X